உள்ளூர் செய்திகள் (District)
நெல்லையில் இன்று 9 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் இன்று வெளியான பரிசோதனை முடிவில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இன்று வெளியான பரிசோதனை முடிவில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியில்
4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதுதவிர அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், பாளை உள்ளிட்ட இடங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இன்று களக்காடு, மானூர், பாப்பாக்குடி வட்டாரங்களில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.
மாவட்டம் முழுவதும் சேர்த்து தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.