உள்ளூர் செய்திகள் (District)
நந்தி நாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
மாசிமகப் பிரமோற்சவத்தை முன்னிட்டு வடக்குபொய்கைநல்லூரில் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை. நல்லூர் பழமை வாய்ந்த நந்தி நாதேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரமோற்சவம் 8&ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவத்தில் நந்திநாதேஸ்வரர், சவுந்தர நாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாட மஹா தீபாராதனை காட்டப்பட்டன.
தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வர்ண வினாயகர் கோவிலில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் சிப்பந்திகள் மற்றும் வீரன்குடிகாடு நந்தவன காளியம்மன் கோவில் நண்பர்கள் குழு செய்திருந்தனர்.