உள்ளூர் செய்திகள் (District)
கோப்புபடம்.

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் நாளை மறுநாள் அவதார தினவிழா

Published On 2022-03-02 10:27 GMT   |   Update On 2022-03-02 10:27 GMT
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை மறுநாள் நடக்கிறது.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில்  அய்யா வைகுண்டர் 190- வது அவதார தின விழா நாளை மறுநாள்  ( 4-ந் தேதி ) நடக்கிறது.

இதையொட்டி  நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு நடக்கிறது. காலை 6 மணிக்கு அன்னதர்மமும், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையும், தொடர்ந்து ஒரு மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. மாலை 7 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.

190-வது அவதார தினமான 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நடக்கிறது. பின்னர் காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து, அவதார தின விழா பணிவிடை நடக்கிறது. பின்னர் அன்னதர்மம் நடக் கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.  

Similar News