உள்ளூர் செய்திகள் (District)
ஒட்டல் உரிமையாளரை தாக்கிய வாலிபர்கள்
சிக்கன் சாப்பாடு இல்லை என கூறிய ஒட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டார்.
கோவை:
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாசபுரத்தை சேர்ந்தவர் குருநாத் (வயது 40). இவர் அந்த பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று 2 பேர் இவரது கடைக்கு வந்தனர். அவர்கள் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு குருநாத் தோசை இருப்பதாக கூறினார்.
ஆனால் அந்த வாலிபர்கள் சிக்கன் சாப்பாடு உள்ளதா? என கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ஓட்டல் உரிமையாளர் குருநாத்தை தாக்கினர்.
பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.