உள்ளூர் செய்திகள் (District)
மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைப்பு.

உரிமம் இன்றி இயங்கிய 2 மதுபான பார்களுக்கு -‘சீல்’

Published On 2022-04-12 08:08 GMT   |   Update On 2022-04-12 08:08 GMT
சீர்காழி பகுதியில் உரிமம் இன்றி இயங்கிய 2 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
சீர்காழி:

சீர்காழி ஈசானிய தெருவில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு உரிமம் இன்றி பார் செயல்ப-டுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக்

மேலாளரும் துணை கலெக்டருமான வாசுதேவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பார் நடத்திய-வர்கள் இரண்டு கடைகளையும் பூட்டி விட்டு

தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து மாவட்ட மேலாளர் வாசுதேவன் முன்னிலையில் பார் செயல்-பட்ட இரண்டு அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் புத்தூர் பகுதியில் இயங்கிவரும்

டாஸ்மாக் கடையில் சோ-தனை நடத்தியபோது அருகே உரிமம் இன்றி இயங்கிவந்த பாருக்கு சீல் வைத்ததுடன், அங்கு பொருட்கள் விற்ப-னையில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த

கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News