உள்ளூர் செய்திகள் (District)
பாளை சிவன் கோவிலில் உழவார பணியில் ஈடுபட்ட பக்தர்கள்.

பாளை சிவன் கோவிலில் 25-வது ஆண்டு உழவார பணி

Published On 2022-05-08 09:32 GMT   |   Update On 2022-05-08 09:32 GMT
பாளை சிவன் கோவிலில் 25-வது ஆண்டு உழவார பணி நடைபெற்றது.
நெல்லை:

பாளை திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். 25-வது ஆண்டு உழவார பணி இன்று சிவன் கோவிலில் நடைபெற்றது. இந்த பணியில் ஆன்மீக பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். 

அவர்கள் கோவில் வளாகங்கள், சிலைகள், விளக்குகள் உள்ளிட்டவைகளை தூய்மைப்படுத்தி உழவார பணியில் ஈடுபட்டனர். 

இன்று காலை தொடங்கிய உழவார பணி மாலை வரை நடக்கிறது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சிவன் கோவிலில் இன்று சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Similar News