உள்ளூர் செய்திகள் (District)
திருவண்ணாமலை கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடந்து வருகிறது.
நேற்று 3-ம் நாள் விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வெட்டிவேர் பல்லக்கில் அமர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு கால் பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளினர்.
அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை தினம் என்பதால் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமேதியது.
அதனை தொடர்ந்து மகிழ மரத்தை சுற்றி பத்து முறை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடந்து வருகிறது.
நேற்று 3-ம் நாள் விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வெட்டிவேர் பல்லக்கில் அமர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு கால் பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளினர்.
அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை தினம் என்பதால் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமேதியது.
அதனை தொடர்ந்து மகிழ மரத்தை சுற்றி பத்து முறை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.