உள்ளூர் செய்திகள் (District)
வி.கே.புரத்தில் விவசாயி- மாணவன் தற்கொலை
வி.கே.புரம் பகுதியில் விவசாயி மற்றும் மாணவன் தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை:
வி.கே.புரம் அருகே உள்ள அயன்திருவாலீஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
வி.கே.புரம் ஜார்ஜ் புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் பிரதீவிராஜ் (17). இவர் அங்குள்ள டூட்டோரியல் கல்லூரியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவ்வப்போது கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார்.
இவரை அவரது தாய் கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.