உள்ளூர் செய்திகள் (District)
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் சாரல் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதையடுத்து அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. முள்ளாங்கினாவிளை, மாம்பழத்துறையாறு, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. முள்ளாங்கினாவிளையில் அதிக பட்சமாக 4.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.