உள்ளூர் செய்திகள் (District)
தற்கொலை.

கண்டக்டர் தற்கொலை

Published On 2022-05-12 09:37 GMT   |   Update On 2022-05-12 09:37 GMT
முதுகுளத்தூர் அருகே திருமணம் செய்து வைக்காததால் கண்டக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகள்  அருண் முனீஸ்வரன் (வயது26). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். 

இவரது சகோதரர்கள் 4 பேர். அவர்களில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அருண் முனீஸ்வரன் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி வீட்டில் வற்புறுத்திவந்ததாக கூறப்படுகிறது.

இவரது அண்ணன் திருமணமாகாமல் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என பெற்றோர் கூறிவிட்டனர். 

இதனால் மனமுடைந்த அருண் முனீஸ்வரன் பருத்திக்கு அடிக்கும் பூச்சிமருந்தை குடித்துவிட்டு பருக்கைக்குடி பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

இதுகுறித்து அவரது சகோதரர் வேலாயுதம் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.

Similar News