உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் உடற்பயிற்சி ஆசிரியர் உள்பட 4 பேர் பலி
சோமையாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
கோவை:
கோவை அருகே உள்ள ஆனைகட்டியை சேர்ந்தவர் ஜீவன் கணேஷ் (வயது 30).
இவர் சோமையாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை- ஆனைக்கட்டி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த ஜீவன் கணேஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜீவன் கணேஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் உடையார் வீதியை சேர்ந்தவர் சேட்டு (55). காவலாளி.
சம்பவத்தன்று இவர் அன்னூர்- மேட்டுப்பாளையம் ேராட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் சேட்டு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சேட்டு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுங்கத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (30). சம்பவத்தன்று இவர் சசிகுமார் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிளில் ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள காமராஜர் ேராட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆரோக்கியராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிட்கோ அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (45).
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மதுக்கரை ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பள்ளி வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய புஷ்பராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.