உள்ளூர் செய்திகள் (District)
கைது

மேச்சேரி அருகே திருவண்ணாமலை போலீஸ் ஏட்டுவை அடித்து, உதைத்த 2 பேர் கைது

Published On 2022-06-02 05:29 GMT   |   Update On 2022-06-02 05:29 GMT
மேச்சேரி அருகே திருவண்ணாமலை போலீஸ் ஏட்டுவை அடித்து, உதைத்தது தொடர்பாக 2 பேர் கைதாகியுள்ள நிலையில் 2 பேர் தப்பி ஓடியுள்ளனர்.
மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 54). இவர் திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார்.

இவர் கடந்த ஒரு வருடமாக பணிக்கு செல்லாமல் விடுமுறையில் வீட்டில் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவருடைய வீடு அருகே உள்ள பிள்ளையார் கோவிலில், வெள்ளார் பகுதியை சேர்ந்த ரமேஷ் (34), மேச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் (33), ஆட்டுக்காரனூர் சரவணன் (42) உள்பட 4 பேர் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சென்று ஏட்டு பழனிசாமி பேசியபோது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று பழனிசாமி வீட்டில் இருந்தபோது, அவர்கள் 4 பேரும் திடீரென வீட்டுக்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் பேசி பழனிசாமியை அடித்து உதைத்தனர்.

சத்தம் கேட்டு உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர். இதை கண்டதும் ரமேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேரும் மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

காயம் அடைந்த ஏட்டு பழனிசாமி சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவர் கொடுத்த புகாரின்பேரில் மேச்சேரி போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து மேட்டூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்பு 2 பேரையும் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆட்டுக்காரனூர் சரவணன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News