உள்ளூர் செய்திகள்
கலிதீர்தாள்குப்பத்தில் சைக்கிள் பேரணி
கலிதீர்தாள்குப்பத்தில் சைக்கிள் பேரணி நடந்தது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்தாள்குப்பம் பெருந்தலைவர் காமராஜர் கலைக் கல்லூரியில் தேசிய மாணவர் படை மற்றும் தாகூர் கலைக்கல்லூரி இணைந்து உலக மிதிவண்டி நாள் முன்னிட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தேசிய மாணவர் படை பிரிவு லெப்டினட் கதிர்வேல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாபு தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார். தேசிய மாணவர் படை பிரிவு கமாண்டர் ஹசாரிகா உத்தரவின்பேரில் சைக்கிள் பேரணி கலிதீர்தாள் குப்பம், மதகடிப்பட்டு, திருபுவனை, நல்லூர் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று மிதிவண்டியின் அவசியத்தை மாணவர்கள் எடுத்துக் கூறினர்.
நிகழ்ச்சியின் முடிவில் தாகூர் கலைக்கல்லூரி கேப்டன் உச்ச பள்ளி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.