ஓசூரில் இளம்பெண்களை வைத்து விபசாரம்: 3 பேர் கைது
- போலீசார் அங்கு சென்று பார்த்த போது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்தது தெரியவந்தது.
- தீபிகா (32) என்பவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணாமலை நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இளம்பெண்களை வைத்து அங்கு விபசாரம் நடந்து வந்தது.
இதையடுத்து அந்த சென்டரை நடத்தி வந்த போச்சம்பள்ளி அங்கம்பட்டி துளசிராமன் (31), பர்கூர தாலுகா மருதேப்பள்ளி பக்கமுள்ள சூலாமலையை சேர்ந்த சூடப்பன் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதே போல மாருதி நகரில் பியூட்டி சென்டர் சென்ற பெயரில், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்தது தெரியவந்தது.
அந்த இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களை விபசாரத்தில் தள்ளியதாக கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்பாலா நாகசெட்டிஅள்ளி பந்தாரப்பா லேஅவுட்டை சேர்ந்த தீபிகா (32) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.