உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி உட்பட 3 பேர் பலி : சோகத்தில் ஆழ்ந்த தொரவலூர் கிராம மக்கள்

Published On 2023-01-03 07:30 GMT   |   Update On 2023-01-03 07:30 GMT
  • சாம்பல் ஏற்றிக்கொண்டிருந்த லாரி, கோமங்கலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • பள்ளி மாணவி உட்பட 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர்.

கடலூர்:

விருத்தாச்சலம் அருகே தொரவலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன். இந்த தம்பதி மகள் ஓவியா (வயது 15). விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஓவியாவின் பெற்றோ ர்கள், மேல்ம ருவத்தூர் கோவிலுக்கு சென்றதினால், பள்ளி யிலிருந்து அவர்களது மகளை, வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக, அதே ஊரை சேர்ந்த, உறவினரான குமாரசாமி (64) என்பவர் தனது பேரனான தருணுடன் (6), மோட்டார் சைக்கிளில் சென்றார். பள்ளியில் மாணவி ஓவியாவை அழைத்து கொண்டு தொரவளுர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமாரசாமி ஓட்டி வந்துள்ளார்.

அப்போது நெய்வே லியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொ ண்டு, கோயமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, கோமங்கலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரியை நிறுத்தாமல் ஓட்டுநர் தப்பி ஓடினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக விருத்தா ச்சலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல்அறிந்த போலீசார் 3 பேர் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை, வேப்பூரில் ேபாலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி ஒட்டி வந்த விருத்தாசலம் அருகே மாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். சாலை விபத்தில் பள்ளி மாணவி உட்பட 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால் தொரவலூர் கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Tags:    

Similar News