உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2023-04-21 08:57 GMT   |   Update On 2023-04-21 08:57 GMT
  • வாழ்க்கையில் விரக்தி அடைந்த மதிவாணன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
  • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 37). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் இவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தார். பின்னர் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் வந்தார்.

மேலும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கணவன்-மனைவி இடையே இது தொடர்பாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கோவை மாதம்பட்டி அடுத்த புதூரை சேர்ந்தவர் கோபால் (80). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வந்து அவரது மனைவியிடம் மது குடிப்பதற்க்கு பணம் கேட்டுள்ளார், ஆனால் அவரது மனைவி பணம் இல்லை என கூறி மறுத்துவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், சானிபவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சுரேஷ் (36). கூலி தொழிலாளி. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே, அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவர்களது உறவினர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். சம்பவத்தன்று சுரேஷ் வழக்கம்போல் வேலைக்குச சென்றார். இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News