உள்ளூர் செய்திகள்

 அரூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்.

கூட்டுறவு சங்கத்தில் ரூ.40 லட்சம் பருத்தி ஏலம்

Published On 2023-03-07 10:13 GMT   |   Update On 2023-03-07 10:13 GMT
  • பருத்தி ஏலத்தில் 420 விவசாயிகள் 1,600 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.
  • ஏலத்தில் ரூபாய் ரூ. 40 லட்சத்திகு பருத்தி ஏலம் போனது.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 420 விவசாயிகள் 1,600 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.

இந்த வாரம் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் 7,866, டிசிஎச் ரக பருத்தி 8,000 முதல் 8,600 ஏலம் போனது. நேற்றைய. ஏலத்தில் ரூபாய் ரூ. 40 லட்சத்திகு பருத்தி ஏலம் போனது. செயலர் அறிவழகன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News