உள்ளூர் செய்திகள் (District)

ஊர்க்காவல்படை வீரர் உள்பட 5 பேர் கைது

Published On 2023-05-21 07:21 GMT   |   Update On 2023-05-21 07:21 GMT
  • ஊர்க்காவல் படையில் பணி யாற்றி வருவதாக கூறி, ஹரினேஷ் தரப்பினரிடம் திடீரென தகராறு செய்துள்ளார்.
  • அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட்டுகளை பறிக்க முயன்றதாக தெரிகிறது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த கொத்தம்பாடியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 23), இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.

இவரது நண்பர்களான வாழப்பாடியைச் சேர்ந்த தினேஷ் (24), ஏ.என்.மங்களத்தை சேர்ந்த கில்சன் (24), ரஞ்சித்குமார் (24), இளையராஜா (24), ஆகிய 5 பேரும், நேற்று அதிகாலை மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள டீ கடையில் நின்றிருந்தனர். இவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த டீ கடைக்கு கள்ளக்கு றிச்சியை சேர்ந்த ஹரினேஷ் (18), பாலா (18), சர்குண பவித்திரன் (18), கோபிநாத் (17), சிபிராஜ் (18), ஆகாஷ் (18), அஜய் (18) ஆகிய 7 பேரும் 3 மோட்டார் சைக்கி ளில் வந்தனர். இவர்கள் அனைவரும் கோவைக்கு சென்று விட்டு, மீண்டும் கள்ளக்குறிச்சி திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்த பிரபாகரன், தான் ஊர்க்காவல் படையில் பணி யாற்றி வருவதாக கூறி, ஹரினேஷ் தரப்பினரிடம் திடீரென தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட்டுகளை பறிக்க முயன்றதாக தெரிகிறது.

மேலும் ஹரினேஷ் தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக ஹரினேஷ் மற்றும் அவரது நண்பர்கள், இதுகுறித்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரூமுக்கு தகவல் தெரிவித்த னர். அவர்கள் வாழப்பாடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி வாழப்பாடி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.

தொடர்ந்து பிரபாகரன், தினேஷ், கில்சன், ரஞ்சித்குமார், இளையராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி மாலையில் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

Similar News