உள்ளூர் செய்திகள்

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி-பேதி

Published On 2023-04-07 08:53 GMT   |   Update On 2023-04-07 08:53 GMT
  • 17 பேர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார்.

இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளை காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு நித்தியாவை வாழ்த்தினர்.

பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்ப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கும், 17 பேர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் வைத்தீஸ்வரன்கோவில் ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து சீர்காழி, மயிலாடுதுறை, மணல்மேடு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News