உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் தாலுகாவில் ஜமாபந்தியில் 50 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா
- திண்டுக்கல் தாலுகாவில் வருவாய்த்துறையின் மூலம் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்றது.
- பயனாளிகள் 50 பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது
குள்ளனம்பட்டி :
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் வருவாய்த்துறையின் மூலம் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்றது.
நிறைவு நாளான நேற்று கிழக்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்கினார்.இதில் ஏற்கனவே சாணார்பட்டி, சிலுவத்தூர், கம்பிளியம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் இருந்து கொடுக்கப்பட்ட பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 50 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை மாவட்ட வருவாய் அலுவலர் லதா வழங்கினார்.இதில் கிழக்கு வட்டாட்சியர் அபுரிஸ்வான், மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.