உள்ளூர் செய்திகள் (District)

டவுன் சாப்டர் பள்ளியில் நடைபெற்ற சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதியவர்களை படத்தில் காணலாம்.

நெல்லை மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை 57 சதவீதம் பேர் எழுதினர்

Published On 2023-05-07 09:02 GMT   |   Update On 2023-05-07 09:02 GMT
  • நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 3,080 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
  • விண்ணப்பித்தவர்களில் 1,310 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நெல்லை:

தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சாலை ஆய்வாளர் பணிக்கு 825 காலி இடங்களுக்கு எழுத்து தேர்வு இன்று நடை பெற்றது.

நெல்லை

எழுத்து தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என 2 நிலைகளில் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 9 பள்ளிகளில் உள்ள 11 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை எழுதுவ தற்காக 3,080 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 1,770 பேர் தேர்வு எழுதினார்கள். இது 57.4 சதவீதமாகும். விண்ணப் பித்தவர்களில் 1,310 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வை கண்காணிக்க துணை தாசில்தார் நிலை யில் 5 சுற்றுக்குழு அலு வலர்கள் மற்றும் தேர்வு நடவடிக்கை களை பதிவு செய்ய 12 வீடியோ கிராபர்கள், ஒரு அறைக்கு ஒரு அலுவலர் வீதம் 11 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் தேர்வை கண்காணித்தனர். தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் 2 மணி நேரத்திற்கு முன்பு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News