உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் சூதாடிய 6 பேர்: அதிரடி கைது

Published On 2022-10-27 09:41 GMT   |   Update On 2022-10-27 09:41 GMT
  • பண்ருட்டியில் சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூரில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கடலூர்மாவட்டபோலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மேற்பார்வையில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும்போலீசார் வீரபெருமாநல்லூருக்கு விரைந்து சென்றுஅங்கு சூதாடியஅதே ஊரை சேர்ந்த விநாயக மூர்த்தி (வயது23),விஜய் (41), முத்துவேல் (55),தனவேல் (40), ஜானகிராமன் (50)வெங்கடேசன் (38) அகியோரை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.

Tags:    

Similar News