உள்ளூர் செய்திகள் (District)

வெறிநாய் கடித்து பலியான ஆடுகள்.

வெறிநாய் கடித்து 7 ஆடுகள் பலி

Published On 2023-02-20 08:01 GMT   |   Update On 2023-02-20 08:01 GMT
  • சேந்தமங்கலம் அருகே உள்ள நாச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ஆடுகளை விவசாய தோட்டத்து வீட்டில் கட்டி வைத்திருந்தார்.
  • நேற்று 4 ஆடுகள், இன்று 3 ஆடுகள் என 7 ஆடுகளை வெறி நாய் கடித்து கொன்றுள்ளது.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நாச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ஆடுகளை விவசாய தோட்டத்து வீட்டில் கட்டி வைத்திருந்தார்.

அதிகாலையில் எழுந்து பார்த்த போது ஆடுகளை நாய் கடித்து குதறியது தெரியவந்தது. நேற்று 4 ஆடுகள், இன்று 3 ஆடுகள் என 7 ஆடுகளை வெறி நாய் கடித்து கொன்றுள்ளது. கடந்த சில நாட்களாக கிராமத்தில் வெறி நாய் தொல்லையால் கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். கால்நடைகளை கடித்து கொல்லும் வெறிநாயினை ஊராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News