உள்ளூர் செய்திகள் (District)
கன்னியாகுமரி அருகே 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பு பிடிபட்டது
- மலைப் பாம்பினை லாவகமாக மீட்டனர்.
- மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுசீந்திரம் அக்கரையில் உள்ள குடியிருப்பு பகுதியில் ராட்சதமலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இந்தராட்சதமலைப்பாம்பு ஊருக்குள் புகுந்ததை பார்த்த காசி என்பவர் உடனடியாக இது பற்றி வனத்துறையினரு க்கு தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் உத்தரவின் படி வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த அந்த மலைப் பாம்பினை லாவகமாக மீட்டனர். அந்த ராட்சத மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த ராட்சத மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.