உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் உடைந்து கிடக்கும் நடைபாதை

Published On 2023-02-06 09:03 GMT   |   Update On 2023-02-06 09:03 GMT
  • நடைபாதையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும்

கோத்தகிரி,

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்பனா காட்டேஜ் பகுதியில் உள்ள 5-வது வார்டில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி உபயோகித்து வரும் நடை பாதை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சேதமடைந்தது. இதனை பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் நடக்கும் பாதசாரிகள் சேதமடைந்த இந்த நடைபாதையின் குழியில் விழுந்து ஏதேனும் பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News