உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே முன்விரோத தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு
- 2 குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
- திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 41). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காசிவேலின் மகன் இறந்தது தொடர்பாக 2 குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பாலு, அவரது மனைவி இந்திரா, ஹரிணி மற்றும் அவரது உறவினர் பாலாஜி ஆகியோர் வெளியில் சென்று தனது வீட்டிற்கு சென்றனர். அப்போது எதிரில் வந்த காசிவேல், அவரது மனைவி லட்சுமி, உறவினர்கள் சின்னமணி, மஞ்சுளா ஆகியோர் இவர்களை வழிமறித்தனர். அவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பாலு மனைவி இந்திரா (32) கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.