உள்ளூர் செய்திகள் (District)

வீராணம் அருகே பிறந்த 45 நாளில் பெண் குழந்தை திடீர் சாவு

Published On 2022-12-02 09:56 GMT   |   Update On 2022-12-02 09:56 GMT
  • சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி அம்மன் கோவில் தெருவில் பெண் குழந்தை திடீர் பலி.
  • இந்த தம்பதிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 26). இவருக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு வர்தினி (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அதை தொடர்ந்து குழந்தையை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் குழந்தை எவ்வாறு இறந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News