உள்ளூர் செய்திகள்

வருகிற 15-ந்தேதி அரவிந்தர் பிறந்தநாளையொட்டி ஆரோவில்லில் கூட்டு தியானம்

Published On 2024-08-11 04:30 GMT   |   Update On 2024-08-11 04:30 GMT
  • காலை 6 மணிக்கு ஆசிரமம் வாசிகளின் கூட்டு தியானம் நடைபெறுகிறது.
  • அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்யலாம்.

புதுச்சேரி:

தேசிய மற்றும் ஆன்மிக வாதியான மகான் அரவிந் தர் 1872-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி மேற்கு வங்க மாநி லம் கொல்கத்தா வில் பிறந்தார். புதுச்சேரியில் ஆன்மிகப் பணியில் ஈடு பட்ட அரவிந்தர் 1950-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்தார்.

அரவிந்தரின் 152-வது பிறந்த நாள் வருகிற 15-ந் தேதி (சுதந்திர தினத் தன்று) கொண்டாடப் படுகிறது. இதனையொட்டி சர்வதேச நகரமான புதுவையையொட்டி தமிழக பகுதியில் அமைந்துள்ள ஆரோவில்லில் ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4. 45 முதல் 6.30 மணி வரை 'போன்பயர்' நிகழ்ச்சி (மூட்டப் பட்ட தீயை சுற்றி அமர்ந்து அமைதியாக தியானம் செய்தல்) மற்றும் கூட்டு தியானம் ஆகியவை நடைபெறுகிறது. இதில் ஆரோவில் பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கிறார்கள்.

அதே நாளில் புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு ஆசிரமம் வாசிகளின் கூட்டு தியானம் நடைபெறுகிறது.

தொடர்ந்து ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் மற்றும் அவரது சீடரான அன்னை மீரா பயன்படுத்திய அறை பொது தரிசனத்திற்கு காலை 6 முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

அரவிந்தர் பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆசிரமம் பின்பக்க வழியாக வரிசையில் வந்து அமைதியான முறையில் அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்யலாம்.

Tags:    

Similar News