உள்ளூர் செய்திகள்

நரி ஓட்டம் எனும் ஐதீக விழா நடந்தது.

வைத்தியநாதசாமி கோவிலில் நரி ஓட்டம் எனும் ஐதீக விழா

Published On 2023-03-31 09:45 GMT   |   Update On 2023-03-31 09:45 GMT
  • பங்குனி மாத பிரமோற்சவ விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • யானை ஓடும் காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நாயகிஅம்மன் உடனா கிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.

நவகிரகங்களில் செவ்வாய் பரிகாரஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் முருகபெருமான் செல்வமுத்துக்குமா ரசுவாமியாக தனி சன்னிதியிலும், தன்வந்திரி சுவாமியும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இவ்விழாவின் போது அருள்மிகு வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் தீர்த்தவாரிக்காக வீதியுலா செல்வார்கள், அதனை தொடர்ந்து நரி ஓட்டம் எனும் யானை ஓடும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறும், முருகபெருமானின் தந்தையாகிய வைத்தியநாதசுவாமியும், தாயாகிய தையல்நாயகி அம்மனும் தீர்த்த வாரிக்காக வீதியுலா செல்லும் போது ஆலயத்தில் தனியாக இருக்கும் முருக பெருமான் (செல்வவமுத்துகுமரசாமி) க்கு விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து, ஓடிவந்து வணங்கி விளையாடுவது ஐதீகம்.பங்குனி பிரம்மோற்ச்சவ விழாவின் நான்காம் நாளான வியாழக்கிழமை பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர்.

சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை அமைதியாக நிற்கும் யானை, பின்னர் முருக பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் போது அதிவேகமாக ஓடி, ஓடி மீண்டும் திரும்பி ஓடிவந்து சப்தம் (பிளிருதல்) எழுப்பியவாறு முருகபெருமானை வணங்கி விளையாடியது.

நரி ஓட்ட வைபவம் என்று அழைக்கப்படும் யானை ஓடும் இக்காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சுவாமி, சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.

Tags:    

Similar News