உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆகாஷிடம் மனு  அளிக்கப்பட்டபோது எடுத்த படம்.

கடனா நதியில் பூங்கா அமைக்க வேண்டும் -கலெக்டரிடம் பஞ்சாயத்து தலைவர் கோரிக்கை

Published On 2022-08-28 08:50 GMT   |   Update On 2022-08-28 09:02 GMT
  • கலெக்டர் ஆகாஷிடம் தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் 3 கோரிக்கை மனு அளித்தார்.
  • மழைக்காலங்களில் குளத்து கரைகள் உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

கடையம்:

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் 3 கோரிக்கை மனு அளித்தார். அதில் கடனா அணை அடிவாரத்தில் பாழடைந்த பூங்காவை பராமரித்து சுற்றுலா தளமாக்கி படகு சவாரி அமைத்து தரவேண்டும். மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட அழகப்பபுரத்தில் அரசு நிரந்தர நெல் கொள்முதல் கட்டிடம் அமைத்து தர வேண்டி தெற்கு குருத்துடையார், வடக்கு குருந்துடையார், சம்பன் குளம் ஆகிய பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 3 குளங்களிலும், பள்ளக்காடுபட்டி குளம்,குட்டிக்குளம், செட்டி குளம் ஆகிய குளங்களிலும் கரை உட்பகுதியில் தடுப்பு சுவர்கள் இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் குளத்து கரைகள் மண் அரிப்பு ஏற்பட்டு கரைகள் உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. உடைப்பு ஏற்பட்டால் நீலமேகபுரம், சம்பன்குளம், அழகப்பபுரம் ஆகிய கிராமங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு குளத்துக்கரைகளில் தடுப்பு சுவர்கள் அமைத்துதர வேண்டியும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுருந்தார்.

Tags:    

Similar News