உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து செல்போன், ஏ.டி.எம் கார்டு பறிப்பு

Published On 2022-12-31 08:53 GMT   |   Update On 2022-12-31 08:53 GMT
  • மூன்று மர்ம நபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர்.
  • செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே வடலூர் பார்வதிபுரம் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வழுதலம்பட்டு செந்தாமரை வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த மூன்று மர்ம நபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர். பின்னர் ஜோதி மணியை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர்.  இது குறித்து ஜோதிமணி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News