உள்ளூர் செய்திகள் (District)

தீப்பிடித்து எரிந்த வேனை படத்தில் காணலாம்.

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் வேன் தீப்பிடித்து எரிந்தது

Published On 2023-01-11 08:37 GMT   |   Update On 2023-01-11 08:37 GMT
  • அந்த வேனை பாண்டிச்சேரி சுல்தா ன்பட்டியைச் சேர்ந்த ரகுமான் (வயசு 30) ஓட்டி வந்தார்.
  • உடனே வேனை நிறுத்தி விட்டு வேனிலில் இருந்து இறங்கி தப்பித்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வேன் ஒன்று சென்றது. அந்த வேனை பாண்டிச்சேரி சுல்தா ன்பட்டியைச் சேர்ந்த ரகுமான் (வயசு 30) ஓட்டி வந்தார். அப்போது விருத்தாச்சலம் மேம்பாலம் அருகே வந்தபோது வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே வேனை ஓட்டிவந்த டிரைவர் ரகுமான் உடனே வேனை நிறுத்தி விட்டு வேனிலில் இருந்து இறங்கி தப்பித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூ ர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை யிலான போலீ சார் மற்றும் தீய ணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

Tags:    

Similar News