செம்மஞ்சேரியில் கார் மோதி 85 வயது மூதாட்டி பலி
- சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி உயிரிழப்பு.
- 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
வேளச்சேரி:
செம்மஞ்சேரியை சேர்ந்தவர் கங்கையம்மாள் (வயது 85). இவர் அதே பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியே வந்த கார் திடீரென கங்கையம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கங்கையம்மாள் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கூட்டு ரோட்டில் வாலிபர்கள் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் பலியானவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.