உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

Published On 2023-07-28 09:22 GMT   |   Update On 2023-07-28 09:22 GMT
  • பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
  • கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அதனை சரியாக பராமரிப்பது இல்லை. எனவே இந்த மாடுகள் ரோட்டின் நடுவே படுத்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கோத்தகிரியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான வாகனஓட்டிகள் முன்விளக்குகளை ஒளிரவிட்டு செல்கின்றனர். அவர்களில் சிலருக்கு ரோட்டில் கால்நடைகள் படுத்து கிடப்பது தெரிவது இல்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கால்நடைகளை ரோட்டில் அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News