உள்ளூர் செய்திகள்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சுவெல்லம் ஏலம்
- 2 மெட்ரிக் டன் அளவு விற்பனை செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
- விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையிலும், கும்பகோணம் வேளாண்மை அலுவலர் தாரா, உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையிலும் அச்சு வெல்லம் மறைமுக ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் அதிகபட்சம் சிப்பம் ஒன்றிற்கு ரூ.1100, குறைந்தபட்சம் சிப்பம் ரூ.1000 மற்றும் சராசரியாக சிப்பம் ஒன்றிற்கு ரூ.1040 என 2 மெட்ரிக் டன் அளவு விற்பனை செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
ஏலத்தில் இலுப்பக்கோரை, வீரமாங்குடி, அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், இளங்கார்குடி ஆகிய பகுதிகளைச் சேரந்த விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.