உள்ளூர் செய்திகள் (District)

சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

தஞ்சை கொங்கணேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு

Published On 2023-07-22 10:10 GMT   |   Update On 2023-07-22 10:10 GMT
  • அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மேலவீதி கொங்கணேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இந்நிலையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று கிழக்கு நோக்கிய அபூர்வமான துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

உற்சவர் அம்மனுக்கு சிறப்பு வளையல்களான அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News