உள்ளூர் செய்திகள்

விசைத்தறிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

Published On 2022-09-26 08:24 GMT   |   Update On 2022-09-26 08:24 GMT
  • குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து விசைத்தறிகள் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவித்தி ருந்தனர்.
  • இந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொங்கு விசைத்தறி கள் சங்கத்தார் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தி ருந்த னர். தற்போது இந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சங்க நிர்வாகி சங்கமேஸ்வரன் கூறியதாவது:

கோவை மாவட்ட விசைத்தறி சங்கத்தார் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேட்டுக்கொண்டனர். அதற்கு விசைத்தறி சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பொறுத்திருங்கள். முதல்வரிடம் பேசி நல்லதொரு பதிலை சொல்கிறேன் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

அதே போல் அரசு கேட்டுக்கொண்ட தற்கிணங்க நாங்களும் மின் கட்டண உயர்வினை கண்டித்து நாளை தொடங்க விருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். எங்களுடன் கொங்கு மண்டல முறுக்கு நூல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News