உள்ளூர் செய்திகள் (District)

குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-17 08:07 GMT   |   Update On 2022-09-17 08:07 GMT
  • கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

கடலூர்:

கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் கெடிலம் ஆற்றில் தனியார் சர்க்கரை ஆலை கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரியும் , மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும், கெடிலம் பெண்ணை ஆற்றின் கரைகளை உயர்த்தி வெள்ளத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்பாட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் . இணைபொதுச்செயலாளர் புருஷோதம்மன் முன்னிலை வகித்தார்.பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கண்ணபிரான், கோபால், லட்சுமிநாராயணன் , காசிநாதன், ரமணி, கல்யாணகுமார், ராதாகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார். 

Tags:    

Similar News