உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.

கடையநல்லூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Published On 2022-06-08 10:09 GMT   |   Update On 2022-06-08 10:09 GMT
  • தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூரில் நடந்தது
  • தினகரனுக்கு கே.டி.சி. நகரில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூர் நகர அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் சுமதி, துணைச் செயலாளர்கள் கோமதி, அருணகிரி சாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர செயலாளர் வேல்சாமி பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத் சிறப்புரையாற்றினார்.

வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு நெல்லை வழியாக வருகை தரும் பொதுச்செயலாளர் தினகரனுக்கு கே.டி.சி. நகரில் தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிப்பது,

வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, பேரூர், ஒன்றிய, கழகத்துக் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிக அளவு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News