உள்ளூர் செய்திகள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம்- டி.டி.வி. தினகரன் தலைமையில் நாளை நடக்கிறது

Published On 2023-06-19 08:24 GMT   |   Update On 2023-06-19 08:24 GMT
  • கட்சி உறுப்பினர் சேர்க்கை, பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
  • ஒன்றிய செயலாளர்கள், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் நடக்கிறது. கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

கூட்டத்தில் துணை பொது செயலாளர் ஜி. செந்தமிழன், மாநில துணை தலைவர் எஸ்.அன்பழகன், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.வேதாசலம் தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பி.ராஜன் பாபு, தி.நகர் வடக்கு பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஆர். சதீஷ்குமார், தி.நகர் தெற்கு பகுதி செயலாளர் வி.வி.விமல், விருகை வடக்கு பகுதி செயலாளர் எம்.குணசீலன், விருகை தெற்கு பகுதி செயலாளர் நா.ஹரி பாபு மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கே.விதுபாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News