உள்ளூர் செய்திகள் (District)

கோத்தகிரி அருகே தீயில் கருகி முதியவர் பலி

Published On 2023-04-18 08:49 GMT   |   Update On 2023-04-18 08:49 GMT
  • கட்டிலில் உடல் கருகிய நிலையில் சிதம்பரம் பிணமாக கிடந்தார்.
  • போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோத்தகிரி,

கோத்தகிரியை அடுத்த முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 73). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. சிதம்பரம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இன்று காலை சிதம்பரத்தை பார்க்க அவரது மகள் வந்தார். அப்போது கட்டிலில் படுத்த நிலையில் உடல் கருகிய நிலையில் சிதம்பரம் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த கோத்தகிரி போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சிதம்பரம் கட்டில் அருகே தீப்பற்ற வைத்து குளிர்காய்வது வழக்கம். அதேபோல் குளிர் காய தீ மூட்டியபோது விபத்து ஏற்பட்டு அவர் பலியாகி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News