உள்ளூர் செய்திகள்

அன்பழகன் நினைவு நாள் கடைபிடிப்பு

Published On 2023-03-08 10:20 GMT   |   Update On 2023-03-08 10:20 GMT
  • தி.மு.க. அலுவலகத்தில் 3-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
  • மதியழகன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் 3-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர்  வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், ராஜேந்திரன், அறிஞர், குண.வசந்தரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், நாகராஜ் மற்றும் அன்பரசன்,  தென்னரசு, நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News