உள்ளூர் செய்திகள் (District)

புங்கம்பாளையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளை சிறப்பாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கியபோது எடுத்த படம். 

கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம்

Published On 2022-11-26 09:19 GMT   |   Update On 2022-11-26 09:19 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் ஊராட்சி புங்கம்பாளையம் பகுதியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • முகாமிற்கு வந்திருந்த 200 பசுக்களுக்கு பெரியம்மை நோய் தடுப்பு ஊசிகள் போடப்பட்டது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் ஊராட்சி புங்கம்பாளையம் பகுதியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

கால்நடை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், தனவேல், மணிவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ் , தடுப்பூசி பணியாளர்கள் சுந்தரமூர்த்தி, சதீஷ்குமார், உதவியாளர் மகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினரால், முகாமிற்கு வந்திருந்த 200 பசுக்களுக்கு பெரியம்மை நோய் தடுப்பு ஊசிகள் போடப்பட்டது.

கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்து அளித்தல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சினை பருவத்தில் உள்ள பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல்கள், 61 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.

மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் விவசாயிகளுக்கு, சிறப்பு மேலாண்மை விருதுகளை கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் வழங்கினார். முகாமில் 600-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News