உள்ளூர் செய்திகள்
கெலமங்கலம் அரசு பள்ளியில் ஆண்டு விழா
- பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
- கலை நிகழ்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவி களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்சி பேசினார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கல்வி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணப்பா அனைவரையும் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர் மகாதேவன் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஒசூர் கல்வி மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் முனிராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் வேதா, கிருஷ்ணதேஜஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு கலை நிகழ்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவி களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்சி பேசினார்கள்.
நிகழ்சியில் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், இருபால் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டார்கள்.