உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

விளையாட்டு இந்தியா மையத்தில் பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2022-12-23 09:53 GMT   |   Update On 2022-12-23 09:53 GMT
  • தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நேர்முக தேர்வு நடைபெறும்.
  • 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18,000 வழங்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு இந்தியா திட்ட நிதியுதவியில் துவக்கநிலை பளுதூக்குதல் பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் அமைக்கப்படவுள்ளது.

விளையாடு இந்தியா மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதுக்குட்பட்ட பளுதூக்குதல் வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்ப டவுள்ளார்.

விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாகவும், தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம்வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்க ளுக்கிடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18,000/- வழங்கப்படும். இது நிரந்தரப் பணி அல்ல.

முற்றிலும்த ற்காலிகமானதாகும். இதன் அடிப்டையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.

இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) வருகிற 3-ந்தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் என்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதா ரர்களுக்கு நேர்முகத் தேர்வு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

உடற்தகுதி, விளையாட்டு த்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட அலுவலக தொலைபேசி எண்.04362-235 633 என்ற எண்ணிலும் மற்றும் கைபேசி எண்.7401703496 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகின்றார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News