உள்ளூர் செய்திகள்

கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

முத்துப்பேட்டை, ஆலங்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோப்புகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா?

Published On 2023-01-05 09:13 GMT   |   Update On 2023-01-05 09:13 GMT
  • தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டர்.
  • அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட பார்வையிட்டர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அங்கிருந்த அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை கூறினார்.

இந்த ஆய்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலராஜன், சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News