உள்ளூர் செய்திகள்

மதுபான கடையில் தகராறு- 2 பேருக்கு கத்திக்குத்து

Published On 2023-02-23 07:22 GMT   |   Update On 2023-02-23 07:22 GMT
  • வெட்டுப்பட்டான் குட்டை என்ற பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது.
  • சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே வெட்டுப்பட்டான் குட்டை என்ற பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு ஆறுமுத்தாம்பாளையம் தொட்டி அப்புச்சி கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது 36), கண்ணன்(32,)ஆகியோர் மது அருந்த சென்றனர். மது அருந்தும் போது, அருகே இருந்த அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல்(34) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. 

இதில் ராஜ் கமல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கண்ணன் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரையும், கை மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News