உள்ளூர் செய்திகள் (District)
- அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு
- யார் இவர்? போலீசார் விசாரணை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு 108 மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யார்? எதற்காக பஸ் நிலையத்திற்கு வந்தார்? எந்த ஊரைச் சார்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மூதாட்டியின் கையில் அமிர்தம் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது.