உள்ளூர் செய்திகள் (District)
16 வயது சிறுமி பலாத்காரம் செய்த டிரைவர் கைது
- திருமணம் செய்து கொள்வதாக கூறி துன்புறுத்தல்
- சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் கைது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 28). இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஜெயமூர்த்தியை கைது செய்தனர்.