உள்ளூர் செய்திகள்

உடையார்பாளையம் அருகே வீட்டின் ஓட்டை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்கு

Published On 2023-05-21 04:57 GMT   |   Update On 2023-05-21 04:57 GMT
  • உடையார்பாளையம் அருகே வீட்டின் ஓட்டை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்கு தொடரபட்டுள்ளது
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடையார்பாளையம்,

உடையார்பாளையம் அருகே வாணதிரையன்பட்டினம் மேட்டு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குமார் (வயது 49). இவர் தனது ஊரில் அமைந்துள்ள சென்னீஸ்வரர் குளத்திற்கு வரும் நீர் வழி புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் காரணமாக வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் (42), ரவி (48), மணிகண்டன் (36) ராமு மற்றும் சிலர் குமார் வீட்டில் இருந்தபோது, அவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு வீட்டின் ஓட்டை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News